கபிலர், கோவூர் கிழார், ஔவையார், பிசிராந்தையார், பத்துப்பாட்டு
1. கபிலர்:
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் பிறந்தவர் கபிலர். குறிஞ்சிக் கவி பாடுவதில் வல்லவர்.
புலன் அழுகற்ற அந்தணன் என்று இவரைப் பாராட்டியவர் நப்பசலையார்.
நல்லிசை வாய்மொழிக் கபிலன் என்று நக்கீரரால் பாராட்டப்பெற்றவர்.
பரணர், இடைக்காடர், பாரி வள்ளல் ஆகியோரின் நண்பர்கள் கபிலர்.
பாரி வள்ளலின் அவைப் புலவராகவும் கபிலர் திகழ்ந்தார்.
பாரி மகளிரை அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை மணந்து கொள்ள வேண்டியவர் கபிலர்.
வரலாற்றுச் செய்திகளை மிகுதியாக பாடிய பரணர் கபிலரின் நண்பர் ஆவார்.
2. கோவூர் கிழார்:
உறையூர் சோழருக்கும் (நெடுங்கிள்ளி) புகார் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத் தூது சென்றவர் கோவூர் கிழார்.
மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை கிள்ளி வளவன் யானைக்காலில் இரட்டு கொல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தியவர் இவர்.
சோறும் நீரும் இரு மருந்து என்று பாடியவர் கோவூர் கிழார்.
3. ஔவையார்:
ஔவை என்பதற்கு தாய் என்று பொருள் வழங்கப்படுகிறது. அதியமானின் அவைப்புலவர் மற்றும் நண்பராகத் திகழ்ந்தவர்.
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர் ஔவையார்.
நீல மணிமிடற்று ஒருவன் போல மண்ணுக பெரும என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை வாழ்த்தியவர் ஔவையார்.
இலக்கிய வரலாற்றில் ஐந்து ஔவையார்கள் உள்ளனர்.
4. பிசிராந்தையார்:
பாண்டிய நாட்டுப் புலவரான பிசிராந்தையார் தலைமுடி நரைக்காமல் இருக்கக் காரணம் உரைத்தவர் ஆவார்.
கோப்பெருஞ்சோழனின் நண்பர் இவர். இருவரும் முகம் காணாமலே நட்பு கொண்டிருந்தனர்.
கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிலிருந்து உயிர் துறந்தவர் பிசிராந்தையார் ஆவார்.
பத்துப்பாட்டு:
- திருமுருகாற்றுப்படை,
- பெருநராற்றுப்படை,
- சிறுபாணாற்றுப்படை,
- பெரும்பாணாற்றுப்படை,
- முல்லைப்பாட்டு,
- மதுரைக்காஞ்சி,
- நெடுநல்வாடை,
- குறிஞ்சி பாட்டு,
- பட்டினப்பாலை,
- மலைபடுகடாம் ஆகியன பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.
Comments
Post a Comment